Saturday 2 July 2016

மலாய் பேடா

பால் – 1 லிட்டர் 
சீனி – 150 கிராம்
சோளமாவு – 1 டீஸ்பூன் (நீரில் கரைக்கவும்)
ஏலப்பொடி, பிஸ்தா. 

செய்முறை
பாலை அடுப்பில் வைத்து கோவா பதம் வரும் வரை கிளறவும். அடுப்பை சிறிதாக வைத்து அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். 

நல்ல கெட்டியானதும், சர்க்கரை, சோளமாவு சேர்த்துக் கிளறவும். ஏலப்பொடி சேர்க்கவும். 

கெட்டியாக பந்து போலான கலவையை ஆற விடவும். அவற்றை சிறிய உருண்டையாக்கி, நடுவில் கட்டை விரலால் அமுக்கி, அதில் ஒரு பிஸ்தா துண்டை வைத்து எடுத்து வைக்கவும். 

இதில் சர்க்கரை சேர்க்கும் போது, சில இதழ்கள் குங்குமப்பூவை பாலில் கரைத்து சேர்த்தால் அதற்கு பெயர் ‘கேஸர் மலாய் பேடா’. செய்வதற்கு எளிய இனிப்பு இது!

No comments:

Post a Comment