Sunday 1 May 2016

ரிப்பன் பக்கோடா

தேவை
கடலை மாவு - 3 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 5 டீ ஸ்பூன் (அ) தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயப்பொடி - சிறிது
நெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் -  பொரித்தெடுக்க
செய்முறை:
கடலைமாவு, அரிசி மாவு, பெருங்காயம் ,உப்பு, மிளகாய்த்தூள், ஆகியவற்றை ஒன்றாக கலந்து
தேவையான அளவு நீர் ஊற்றி கெட்டியாகப்  பிசையவும்.
நெய், காய்ந்த எண்ணெய் ஊற்றி மேலும் இலகுவாக பிசையவும். 
(கடினமாக இல்லாமல் பிழிவதற்கு ஏற்றவாறு  இலகுவாக இருக்க வேண்டும். அதேசமயம் பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ரிப்பன் அச்சு கொண்டு எண்ணெயில்  பிழிந்து சிவந்ததும் எடுக்கவும்.
ரிப்பன் பக்கோடா ரெடி.



No comments:

Post a Comment