Thursday 25 February 2016

சர்க்கரை வள்ளிக் கிழங்கு போளி



தேவை
வேகவைத்து மசித்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு -- 1 கப்
வெல்லம்-----------1 1/2 கப்
தேங்காய்----- 1 மூடி
மைதா மாவு--- 1 1/2 கப்
ஏலக்காய்------ 10
கேசரி பௌடர்--- 1 சிட்டிகை
உப்பு--- 1 சிட்டிகை 
நல்லெண்ணை--- சிறிதளவு
நெய்--- போளிகளில் தடவ தேவையான அளவு

செய்முறை

தேங்காயை மிருதுவாகத் துருவிக் கொள்ளவும்.ஏலக்காயை பொடி செய்யவும்.

மைதாமாவுடன் கேசரி பௌடர், உப்பு சேர்த்து 4 டீஸ்பூன் நல்லெண்ணெய், தேவையான நீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைக்கவும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேகவிட்டு, தோழி நீக்கி கட்டியில்லாமல்மசித்துக் கொள்ளவும்.

அத்துடன் துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து 
ஏலப்பொடியை கலந்து நன்கு பிசையவும்.

மாவையும், பூரணத்தையும் சரி அளவாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

வாழை இலை அல்லது திக்கான ப்ளாஸ்டிக் பேப்பர் எடுத்து நல்லெண்ணையை நன்கு தடவி ,அதன் மேல் ஒரு மைதா உருண்டையை வைத்து கையால் சிறிய வட்டமாக்கவும். அதில் ஒரு பூரண உருண்டை வைத்து நன்கு மூடி உள்ளங்கையால் அதனை வட்ட போளிகளாகத் தட்டவும்.

தவ்வாவை கேஸில் வைத்து எண்ணெயைத் தடவி தட்டிய போளியை அதில் போடவும். சற்று வெந்தபின் திருப்பிப் போட்டு வேக விடவும்.இரு பக்கமும் நெய்யைத்தடவி எடுத்து வைக்கவும். கேஸை சிம்மில் வைக்கவும். பெரிதாக வைத்தால் தீய்ந்து விடும்.


சூடாகவும், ஆறவைத்தும் சாப்பிட சூப்பர் போளி தயார்! 

No comments:

Post a Comment