Tuesday 14 April 2015

கல்கண்டு வடை

இது செட்டிநாட்டு ஸ்பெ ஷலான இனிப்பு. வித்யாசமான சுவையுள்ள இந்த வடை செய்வது எளியது.


தேவை 
உளுத்தம்பருப்பு---1 கப் 
அரிசி-----1/4 கப்
கல்கண்டு---3/4 கப் 
ஏலப்பொடி--1 தேக்கரண்டி 
எண்ணெய்---வேகவிட 

செய்முறை 
அரிசி, உளுத்தம்பருப்பை சேர்த்து நனைத்து 2 மணி நேரம் ஊறவிடவும். தண்ணீரை ஒட்ட வடித்து, ஒரு தடியான துண்டில் உலர்த்தவும். 






கல்கண்டை பொடி செய்யவும். அரிசி, உளுந்தை மிக்சியில் சிறிதும் தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைக்கவும். கடைசியாக கல்கண்டு போடி சேர்த்து அரைக்கவும். கல்கண்டு சேர்த்ததும் கலவை தளர்ந்து விடும். அதனாலேயே முதலில் அரைக்கும்போது சிறிதும் நீர் சேர்க்கக் கூடாது. ஏலப்பொடி சேர்த்து கலக்கவும்.






இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் உளுந்து மெதுவடை தட்டுவது போல தட்டி, நடுவில் துளையிட்டு எண்ணையில் போடவும். அடுப்பை சிறியதாக வைக்கவும். நன்கு வெந்து பிரவுன் கலரானதும் எடுக்கவும்.





இதில் கல்கண்டு சேர்ந்திருப்பதால் சாதாரண வடையைவிட சற்று அதிக ப்ரவுனாக இருக்கும். ஆனால் சுவை மிக அருமையாக இருக்கும்.நான்கு நாட்கள் வரை சாப்பிட நன்றாக இருக்கும்.






வித்யாசமான சுவையில் கல்கண்டு வடை இனிக்கும்!

 
 


Monday 13 April 2015

வாழைப்பூ பருப்பு உசிலி


வாழைப்பூ
எடுத்த பூக்கள்













தேவை

வாழைப்பூ - 1
துவரம்பருப்பு - 3/4 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
மிளகாய்வற்றல் - 8-9
பெருங்காயப்பொடி - 1/4 தேக்கரண்டி  
மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி
எண்ணை  - 4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை
வாழைப்பூவை ஆய்ந்து உள்ளிருக்கும் ள்ளன் என்ற காம்புகளை ஆய்ந்து,பொடியாக நறுக்கி கறுக்காமல் இருக்க சிறிது மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். நீருடன் இரண்டு தேக்கரண்டி புளிக்  கரைசல் சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேகவிட்டு, வடிகட்டி பிழிந்து வைத்துக் கொள்ளவும். 

இரண்டு பருப்புகளையும் 1/2 மணிநேரம் ஊறவைத்து, அத்துடன் மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். 


அரைத்த  பருப்பு


அதில் மஞ்சள்பொடி, பெருங்காயப்பொடி சேர்த்து நன்கு கலந்து, ஒரு தட்டில் அடை போல தட்டி வைத்து குக்கரில் வேகவிடவும். 


குக்கரில் வேகவைக்க



வெந்ததை எடுத்து சற்று ஆறியதும் மிக்சியின் சின்ன கப்பில் போட்டு விப்பரில் ஒரு வினாடி சுற்றினால் நன்கு பூப்போல் உதிர்ந்து விடும்.

விப்பரில் சுற்ற


வாணலியில் எண்ணை விட்டு, கடுகு தாளித்து அதில் உதிர்த்த பருப்பு,  வேகவிட்ட வாழைப்பூ சேர்த்து 10 நிமிடம் கிளறவும். அடுப்பை சிறிதாக வைக்கவும். அருமையான வாழைப்பூ உசிலி சாதத்துடன் பிசைந்தும், தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். 

மணக்கும் உசிலி

நார்ச் சத்து நிறைந்த வாழைப்பூ உடலுக்கு நலம் பயக்கும்.

Friday 3 April 2015

பால் கொழுக்கட்டை

தேவை:

அரிசி மாவு--1 கப் (அரிசியை ஊறவைத்து, வடிகட்டி மிக்சியில் நைசாக அரைக்கவும்.)
அல்லது ரெடி கொழுக்கட்டை மாவு கடையில் வாங்கலாம்.
பால்---1 கப்
வெல்லம் --1 கப்
தேங்காய்ப்பால்---1/2 கப்
ஏலக்காய் ---6
நெய்---4 தேக்கரண்டி
குங்குமப்பூ---சில இதழ்கள்
உப்பு---1 சிட்டிகை

செய்முறை

1 மூடி தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுக்கவும்.

கப் தண்ணீரில் சிட்டிகை உப்பு, நெய்  சேர்த்து கொதிக்க விடவும். அதில் அரிசிமாவை சேர்த்து கட்டி தட்டாமல் ஐந்து நிமிடங்கள் நன்கு கிளறவும்.

கையில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி, சற்று ஆறியதும் நன்கு பிசையவும்.

அந்த மாவை நன்கு தேய்த்துப் பிசைந்து, பட்டாணி அளவுள்ள சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

உருட்டிய அரிசி மாவு உருண்டைகளின் அளவுக்கு, தண்ணீரை கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் செய்து வைத்துள்ள உருண்டைகளில் பாதி அளவைப் போடவும். அடுப்பை சின்னதாக வைத்து, மெதுவாகக் கிளறவும்.





மீண்டும் தண்ணீர் கொதித்ததும், மீதமுள்ள உருண்டைகளைப் போடவும். அடுப்பை பெரிதாக்கினாலும், அடிக்கடி கிளறினாலும் உருண்டைகள் கரைந்து விடும்.


10 நிமிடங்கள் வெந்ததும், பால் சேர்க்கவும். சற்று கொதித்ததும் வெல்லத்தையும், தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும்.


பத்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி ஏலப்பொடி, குங்குமப்பூ சேர்க்கவும்.


சுவையான பால் கொழுக்கட்டை அருமையாக இருக்கும்.